சினிமா நடிப்பு என்பது தனது தொழில், அதனால் ரசிகர்களும் அவர் அவர் வேலையை பார்க்க வேண்டும், அதை விட்டுவிட்டு எனக்கு கட்-அவுட் வைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை வீணடிக்க கூடாது, என்பதற்காக ரசிகர் மன்றத்தை கலைத்த அஜித், ரசிகர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவேகம் படத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அஜித், தற்போது ஓய்வில் இருக்கிறார். இதற்கிடையே, அரசியல் குறித்து ரசிகர்களிடம் அஜித் பேசியதாக ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஜய், விஷால், கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வர ஆர்வமாக உள்ள நிலையில், அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். இது குறித்து ரசிகர்கள் சிலர் அஜித்திடம் பேசியபோது, “தனக்கு அரசியல் சரிபட்டு வராது” என்று அஜித் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரசிகர்கள் ஒருவர் கூறுகையில், “அஜித் நடிப்பை தொழிலாக மட்டுமே பார்க்கிறார். ரசிகர்களை வைத்து விளம்பரம் தேடுவது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபட மாட்டார். அதேபோல், பட விநியோகம், தயாரிப்பது போன்ற பலவிதத்தில் சம்பாதிப்பதையும் விரும்ப மாட்டார். அவர் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால், அவற்றை விளம்பரத்திற்காக பயன்படுத்த மாட்டார்.
அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், அதை அவரிடமும் தெரிவித்தோம். ஆனால், ”தனக்கு அரசியல் சரிபட்டு வராது” என்று கூறிவிட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...