விஜயின் ‘மெர்சல்’ தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்து வரும் வெளிநாடுகளில் அதிக வசூலைப் பெற்ற படத்தின் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
அமீர் கானின் டங்கல், ஷாருக்கானின் ராயிஸ், பிரபாஸின் பாகுபலி ஆகிய படங்கள் வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூலித்திருந்த நிலையில், விஜயின் ‘மெர்சல்’ 12 நாட்களில் 11.1 மில்லியன் டாலர் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், 10 மில்லியன் டாலர் வெளிநாட்டு வசூல் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் மெர்சல் பெற்றுள்ளது.
இந்த நிலையில், படம் வெளியான 12 நாட்களிலேயே ரூ.200 கோடி வசூலை தொட்டிருக்கும் ‘மெர்சல்’ விரைவில் ரஜினின் எந்திரன் பட வசூலை மிஞ்சுவிடும் என்றும் கூறப்படுகிறது. எந்திரன் வெளியாகி 100 நாட்கள் ஓடிய பிறகே ரூ.280 கோடி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...