Latest News :

சென்னை தத்தளிக்கும் போது இப்படி செய்யலாமா? - சர்ச்சையில் சிக்கிய விஜய்
Saturday November-04 2017

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், சென்னையே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, விஜய் தனது வீட்டில் மது விருந்து வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி வசனங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதோடு, அதற்கு பா.ஜ.க தெரிவித்த எதிர்ப்பு படத்திற்கு விளம்பரமாக மாறியது. இதனால் படம் அமோகமாக வசூல் செய்திருக்க, ஒட்டு மொத்த ‘மெர்சல்’ குழுவினரும் மகிழ்ச்சியில் தத்தளிகிறார்கள்.

 

இந்த நிலையில், ’மெர்சல்’ வெற்றியை கொண்டாட படக்குழுவினரை தனது வீட்டுக்கு அழைத்து நடிகர் விஜய் மெகா விருந்து ஒன்று கொடுத்துள்ளார். இதில் நாயகிகள் பங்கேற்கவில்லை என்றாலும், ஏ.ஆர்.ரஹ்மானு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் விருந்தில் பங்கேற்றுள்ளனர். இந்த விருந்தில் படக்குழுவினருக்கு விலை உயர்ந்த பரிசு ஒன்றை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

தொடர் கன மழையால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், விஜய் இப்படி விருந்து வைத்து தனது படத்தின் வெற்றியை கொண்டாடலாமா? என்று சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருவதால், விஜய் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

மக்களுக்காக பேசுகிறேன், என்று சொல்லும் விஜய், மக்கள் துயரத்தில் இருக்கும் போது, இப்படி விருந்து வைப்பது சரியா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related News

1185

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery