விஜய் மற்றும் அஜித்துக்கு பொது மக்கள் மட்டும் ரசிகர்களாக இருப்பதல்ல, சில பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவர்களின் பட்டியலில் நடிகர் ஜெய்யும் ஒருவர். தீவிர அஜித் ரசிகரான ஜெய், தற்போது விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான விஜயின் ‘பகவதி’ படத்தில், அவருக்கு தம்பி வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான ஜெய், சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜெய், “எனது சினிமா வாழ்வில் 15 வருடங்களை இன்று நிறைவு செய்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி.” என்று கூறியதோடு, “என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தில் தம்பியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இப்போது இங்கே இல்லை” என விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர் ஒருவர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, அவரை வெகுவாக பாராட்டி ட்வீட் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...