தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று பெயர் எடுத்துள்ள நயந்தாராவின் ‘அறம்’ தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ள நயந்தாரா, எத்தனை கோடி ரூபாஇ சம்பளம் கொடுத்தாலும் ஒன்றை மட்டும் செய்வதில்லை, என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
அது, வேறொ ஒன்றுமில்லை, போலீஸ் யூனிபார்ம் மட்டும் போட மாட்டாராம். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நாடித்துள்ள நயந்தாரா, ஒரு காட்சியில் கூட யூனிபார்ம் போடவில்லையாம்.
இது ஏன்?, என்று விசாரிக்கயில் தான் இந்த ரகசியம் கசிந்தது. இயக்குநர் எவ்வளவோ கெஞ்சியும் நயன், போலீஸ் யூனிபார்முக்கு நோ சொல்லிவிட்டாராம். அதுமட்டுமல்ல, தான் போலீஸ் வேடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நடிப்பேன், ஆனால் போலீஸ் யூனிபார்ம் மட்டும் போட்டு நடிக்க மாட்டேன், என்று தனது நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...