ஸ்ரீ ஸ்ரீ கணேஷ் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் ‘உன்னால் என்னால்’. ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, ஜெகா, உமேஷ் ஆகிய மூன்று பேர் ஹீரோக்களாக நடிக்கும் இப்படத்தில், லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் சோனியா அகர்வால் நடிக்கிறார். மற்றும் ராஜேஷ், ராமசந்திரன், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முகமது ரிஸ்வான் இசையமைக்க, தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். எம்.ஆர்.ரெஜிஷ் எடிட்டிங் செய்ய, விஜய்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார். கெளசல்யா நடனத்தை கவனிக்க, பில்லா ஜெகன் ஆக்ஷன் ஏரியாவை கவனிக்க, தயாரிப்பு நிர்வாகத்தை மணிகண்டன் கவனிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா படம் குறித்து கூறுகையில், ”கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் மூன்று இளைஞர்கள் எ.ஆர்.ஜெயகிருஷ்ணா ( ராஜ்), ஜெகா (ஜீவன்), உமேஷ் (கணேஷ் ). பொருளாதார தேவைகளை நோக்கி பயணிக்கும்போது ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் பணத்துக்காக எதையும் செய்யும் கும்பலிடம் சேர்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த கும்பலின் சுயரூபம் தெரிந்து இளைஞர்கள் இறுதியில் பணத் தேவைக்காக பணிந்தார்களா? இல்லை சதிவலையை உடைத்து மனசாட்சிக்கும், மனித நேயத்திற்கும் மகுடம் சூடினார்களா என்பதுதான் படத்தின் திரைக்கதை. வேகமும் விவேகமும் கலந்த, சுவாரஸ்யங்களுடன், அடுத்தடுத்து யூகிக்க முடியாத திரைக்கதையாக இருக்கும் விதத்தில் உருவாக்கி கதையின் நாயகனாக களமிறங்குகிறேன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.” என்றார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...