ஹீரோவாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடம் ஒன்றில் நடிக்க உள்ளார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார்.
டிராபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர். அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ‘டிராபிக் ராமசாமி’.
இதில் கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள்.
கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப், ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகும் விஜய் விக்ரம், பூனாவில் திரைப்படத் தொழில்நுட்பம் படித்துவிட்டு, 5 ஆண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘ஹரஹர மகாதேவகி’ புகழ் பாலு இசையமிக்கிறார். பிரபாகர் எடிட்டிங் செய்ய, ஏ.வனராக் கலைத்துறையை கவனிக்க, அன்பறிவு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர்.
இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஈரோடு மோகன் என்பவர் முதல் முறையாக தயாரிக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...