ரஜினி, கமலுக்கு விருது வழங்கும் ஆந்திர அரசு!
Wednesday November-15 2017

ஆந்திர அரசின் சார்பில் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதுகள் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு என்.டி.ஆர். விருது அறிவிக்கப்ப்ட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு தமிழகத்தை சேர்ந்த கமல்ஹாசன், 2015-ம் ஆண்டுக்கு ராகவேந்திரா ராவ், 2016-ம் ஆண்டுக்கு ரஜினிகாந்த்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

தேசிய விருது பெற்ற பாகுபலி திரைப்படம் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பெல்லி சூப்புலு தேர்வாகியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான லிஜெண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த அமைப்பின் தலைவராக திரைப்பட நடிகரும், நந்தமூரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலுக்கு ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 

என்.டி.ஆர். தேசிய விருது 5 லட்சம் ரூபாய் பணத்துடன் நினைவு பரிசும் வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் விஜயவாடாவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Related News

1266

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery