சமூக ஊடகங்களில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வரும் சினிமா கலைஞர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவராக தகிழ்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து விமர்சித்த இவர், தொடர்ந்து பல அரசியல் கருத்துக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமையல் கியாஸ் மானியம் ரத்து தொடர்பான அரசு அறிவிப்புக்கு, எதிராக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, “ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் கியாஸ் மானியம் ரத்துக்கு பதிலாக எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் இலவச விமான பயணம், இலவச வீடு, இலவச ஊழியர்கள் போன்ற சலுகைகளை ஏன் ரத்து செய்யக்கூடாது?” என்று கூறியுள்ளார்.
மற்றொரு டிவிட்டில், ”ரேஷன் கட்டு, கியாஸ் கட்டு, பவர் கட்டு, தண்ணீர் கட்டு, மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க. விளங்கும். இம்சை அரசன்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்...
‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும்...