சமூக ஊடகங்களில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வரும் சினிமா கலைஞர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவராக தகிழ்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து விமர்சித்த இவர், தொடர்ந்து பல அரசியல் கருத்துக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமையல் கியாஸ் மானியம் ரத்து தொடர்பான அரசு அறிவிப்புக்கு, எதிராக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, “ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் கியாஸ் மானியம் ரத்துக்கு பதிலாக எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் இலவச விமான பயணம், இலவச வீடு, இலவச ஊழியர்கள் போன்ற சலுகைகளை ஏன் ரத்து செய்யக்கூடாது?” என்று கூறியுள்ளார்.
மற்றொரு டிவிட்டில், ”ரேஷன் கட்டு, கியாஸ் கட்டு, பவர் கட்டு, தண்ணீர் கட்டு, மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு, மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க. விளங்கும். இம்சை அரசன்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...
ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு...