மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள துல்கர் சல்மான், தமிழிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் நடிக்கும் அடுத்த தமிழ்ப் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இவர் விஜய் மில்டனிடம் உதவு இயக்குநராக பணியாற்றியவர் ஆவார்.
படம் குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறுகையில், “இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுது தான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பாடல் மனதிற்கு வந்தது. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை.
மிக பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான். இக்கதைக்கு அவரை விட பொருத்தமான ஹீரோ யாருமில்லை. அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டு செல்வார் என உறுதியாக நம்புகிறேன். அவருக்கு ஜோடியாக நடிக்க ரீத்து வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குனர் டி. சந்தானம். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது” என்றார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...