தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பேசப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஓவியாவுக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் குயினாக திகழும் ஓவியாவுக்கு ஆதரவாக மீம்ஸ்கள், டிவிட்டர் கருத்துகள் என்று ஒரே ஓவியா புராணத்தை பாட, இசையமைப்பாளர் இளையராஜா ஓவியாவை விலாசிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
ஓவியா சீனி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படம் முழுவதும் முடிவடைந்து வெளியாகமல் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்கு கிடைத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ‘சீனி’ திரைப்படக் குழு, படத்தின் தலைப்பை ‘ஓவியா’ என்று மாற்றி விட்டது. மேலும், இப்படத்தின் ஒரு காட்சியில் இளையராஜாவின் ஒரு பாடலின் சில வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். இதை அறிந்த சிலர் ”தயாரிப்பாளரிடம், இளையராஜாவிடம் பாடல் வரி பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து சொல்லிவிடுங்கள், பிறகு ரிலீஸின் போது பிரச்சினையாகிவிட போகிறது. நீங்களே சொல்லிவிட்டால், அவர் ஓகே சொல்வதோடு, வாழ்த்தியும் அனுப்புவார், அதை செய்தியாக்கினால் படத்திற்கும் விளம்பரமாக இருக்கும்” என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்கள்.
இதை கேட்டு கனவு கண்ட ‘ஓவியா’ படத்தின் தயாரிப்பாளர் இளையராஜாவை சந்திக்க அதிகாலையில் சென்றுள்ளார். இளையராஜா எப்போதும் இருக்கும் அந்த இடத்தில் சென்ற தயாரிப்பாளருக்கு ராஜா சாரை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. பக்தியுடன் இளையராஜா முன்பு நின்ற தயாரிப்பாளர், ஏன் தான் இங்கு வந்தோமோ, என்று நினைக்கும் அளவுக்கு அவரை இளையராஜா விளாசி தள்ளிவிட்டாராம்.
தனது பாடல் வரியை எப்படி பயன்படுத்தலாம்? என்று வித்தியாசமான தோணியில், வித்தியாசமான வார்த்தையில் கேட்ட இளையராஜா, அந்த தயாரிப்பாளர் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில பச்சை வசனங்களை பேசியதோடு, “5 நிமிடத்திற்குள் இங்கிருந்து சென்றுவிடுங்கள், இல்லையெனில் நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டாராம்.
இளையராஜாவின் வாழ்த்து கிடைக்கும் என்று ஆசை ஆசையாக சென்ற அந்த தயாரிப்பாளர், அவரது விளாசலால் ஆடிப்போய் இருக்கிறாராம்.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...