ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மிடி பெஞ்செர்ஸ் பற்றிய கதையாக, மெசஜ் சொல்லும் படமாகவும், அதே சமயம் கமர்ஷியலான படமாகவும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தை பார்க்கும் பள்ளி ஆசிரியர்கள், இப்படம் பள்ளி மாணவ, மாணவிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் என்று கருதுவதோடு, தங்களது பள்ளி மாணவர்களுக்கு இப்படத்தை பார்க்க சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து தரும்படி இயக்குநர் த.செ.கனாவேளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஞான்வேல், சாவித்திரி அம்மாள் கீழ்த்திசை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை பார்க்க சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த சிறப்பு காட்சி, சென்னை சத்யம் திரையரங்கில் உள்ள சாந்தம் ஸ்க்ரீனில் நாளை (ஆகஸ்ட் 4) காலை செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...