திரைப்படங்களை தவிர வேறு எதிலும் நடிகர் அஜித்தை பார்க்க முடியாது. ஏன், அவர் நடிக்கும் படங்களின் விழாக்களில் கூட அஜித் கலந்துக்கொள்ள மாட்டார். அப்படி பட்டவர் பணத்திற்காக நடத்தப்படும் நட்சத்திர கலை விழாவில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கியுள்ள நாசார், விஷால் மற்றும் கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் குழு, பல்வேறு வகையில் நிதி திரட்டி வருகிறன்றனர். அந்த வகையில்,
மலேசியாவில் விரைவில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளனர். இதில் ரஜினி, கமல் கலந்துக்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜய், அஜித்திடம் இதுக்குறித்து பேச்சு வார்த்தை நடக்க, எப்போதும் அஜித் இதுப்போன்ற விஷயங்களுக்கு எல்லாம் உடனே நோ சொல்லி அனுப்பிவிடுவார்.
ஆனால் இந்த முறை ‘சொல்றேன்’ என்று பதில் அளித்துள்ளாராம். அதனால், அவர் இந்த விழாவில் நிச்சயம் பங்கேற்பார், என்று நடிகர் சங்க நட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...