Latest News :

பெப்சி வேலை நிறுத்தம் முடிவுக்கு அந்தது - நாளை முதல் படப்பிடிப்புகள் நடக்கும்
Thursday August-03 2017

ஊதிய விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெப்ஸி கடந்த 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. இதன் காரணமாக ரஜினிகாந்தின் ‘காலா’ உள்ளிட்ட சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. மேலும் 10 ஆயிரம் தொழிலாளர்களை வேலை இன்றி தவித்தனர்.

 

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியை அழைத்து இந்த விவகாரம் குறித்து பேசியதோடு, வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பேச்சு வார்த்தை மூலம் சுமூகமாக முடிவு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்நிலையில், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று அறிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதால், படப்பிடிப்புகள் தொடங்குகிறது.

 

அதே சமயம், பெப்ஸி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கம், தாங்கள் முன்பு அறிவித்தது போல பெப்ஸி தொழிலாளர்களுடனும், பிற தொழிலாளர்களுடம் பணிபுரிவோம், என்று அறிவித்துள்ளது.

Related News

132

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery