ஊதிய விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெப்ஸி கடந்த 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. இதன் காரணமாக ரஜினிகாந்தின் ‘காலா’ உள்ளிட்ட சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. மேலும் 10 ஆயிரம் தொழிலாளர்களை வேலை இன்றி தவித்தனர்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியை அழைத்து இந்த விவகாரம் குறித்து பேசியதோடு, வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பேச்சு வார்த்தை மூலம் சுமூகமாக முடிவு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று அறிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதால், படப்பிடிப்புகள் தொடங்குகிறது.
அதே சமயம், பெப்ஸி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கம், தாங்கள் முன்பு அறிவித்தது போல பெப்ஸி தொழிலாளர்களுடனும், பிற தொழிலாளர்களுடம் பணிபுரிவோம், என்று அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...