Latest News :

அசோக் தற்கொலைக்கு காரணமான அன்பு செழியன் அஜித்தையும் மிரட்டியுள்ளார்!
Wednesday November-22 2017

சென்னை வளசரவாக்கத்தில், சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கோலிவிட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அன்புச் செழியன் என்ற கந்துவட்டிக்காரர்தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இவருடைய மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவருடைய மரணத்திற்கு காரணமாக இருக்கும் அன்புச்செழியன் என்கிற கந்து வட்டிக்காரர் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

 

இந்த நிலையில், மதுரை பைனான்சியர் அன்புச் செழியன் நடிகர் அஜித்தையும் மிரட்டியதாக இயக்குனர் சுசீந்திரன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அன்புச் செழியனால் மிரட்டப்பட்டதை அஜித் மறுக்கமாட்டார் என்று அவர் கூறியுள்ளது கோலிவ்விட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நான் கடவுள் படத்தில் முதலில் ஒப்பந்தமானது அஜித் தான். இந்த பட விவகாரம் தொடர்பாக அஜித்தை அன்பு மிரட்டியதாக அப்போது பரவலாக பேசப்பட்டு வந்ததோடு, இந்த சம்பவத்தின் போது அந்த இடத்தில் இயக்குனர் பாலாவும் உடன் இருந்ததாக கூறப்பட்டது.

Related News

1323

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery