Latest News :

அசோக் தற்கொலைக்கு காரணமான அன்பு செழியன் அஜித்தையும் மிரட்டியுள்ளார்!
Wednesday November-22 2017

சென்னை வளசரவாக்கத்தில், சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கோலிவிட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அன்புச் செழியன் என்ற கந்துவட்டிக்காரர்தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இவருடைய மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவருடைய மரணத்திற்கு காரணமாக இருக்கும் அன்புச்செழியன் என்கிற கந்து வட்டிக்காரர் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

 

இந்த நிலையில், மதுரை பைனான்சியர் அன்புச் செழியன் நடிகர் அஜித்தையும் மிரட்டியதாக இயக்குனர் சுசீந்திரன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அன்புச் செழியனால் மிரட்டப்பட்டதை அஜித் மறுக்கமாட்டார் என்று அவர் கூறியுள்ளது கோலிவ்விட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நான் கடவுள் படத்தில் முதலில் ஒப்பந்தமானது அஜித் தான். இந்த பட விவகாரம் தொடர்பாக அஜித்தை அன்பு மிரட்டியதாக அப்போது பரவலாக பேசப்பட்டு வந்ததோடு, இந்த சம்பவத்தின் போது அந்த இடத்தில் இயக்குனர் பாலாவும் உடன் இருந்ததாக கூறப்பட்டது.

Related News

1323

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery