‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ராணா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘நான் ஆணையிட்டால்’. காஜல் அகர்வால், கேத்ரின் தெரஸா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ள இப்படத்தை தேஜா இயக்கியிருக்கிறார்.
ஏற்கான்வே ‘லீடர்’ என்ற அரசியல் படத்தில் நடித்திருக்கும் ராணாவுக்கு இது இரண்டாவது அரசியல் படமாகும். பொதுவாக அரசியல் திரைப்படங்கள் என்றாலே, சில விசயங்களை மறைமுகமாகவும், நகைச்சுவை பாணியிலும் தான் சொல்லுவது வழக்கம். ஆனால், ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், நிகழ்வுகளையும் துணிச்சலாக சொல்லியிருக்கிறார்கள்.
நேர்மையான இளைஞன் ஒருவனை, அரசியல் எப்படி மாற்றுகிறது என்பது தான் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் கதை. இப்படத்தின் மூலம் அரசியல் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக பதிவு செய்துள்ள தேஜா, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் இப்படத்தை இயக்கியிருக்கிறாராம்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...