‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ராணா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘நான் ஆணையிட்டால்’. காஜல் அகர்வால், கேத்ரின் தெரஸா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ள இப்படத்தை தேஜா இயக்கியிருக்கிறார்.
ஏற்கான்வே ‘லீடர்’ என்ற அரசியல் படத்தில் நடித்திருக்கும் ராணாவுக்கு இது இரண்டாவது அரசியல் படமாகும். பொதுவாக அரசியல் திரைப்படங்கள் என்றாலே, சில விசயங்களை மறைமுகமாகவும், நகைச்சுவை பாணியிலும் தான் சொல்லுவது வழக்கம். ஆனால், ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், நிகழ்வுகளையும் துணிச்சலாக சொல்லியிருக்கிறார்கள்.
நேர்மையான இளைஞன் ஒருவனை, அரசியல் எப்படி மாற்றுகிறது என்பது தான் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் கதை. இப்படத்தின் மூலம் அரசியல் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக பதிவு செய்துள்ள தேஜா, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் இப்படத்தை இயக்கியிருக்கிறாராம்.
பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில், மலையாள சினிமா நடன இயக்குநர் ராபின் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வருத்துப் போக்கு’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தாய் கிழவி’...
இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது...