‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ராணா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘நான் ஆணையிட்டால்’. காஜல் அகர்வால், கேத்ரின் தெரஸா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ள இப்படத்தை தேஜா இயக்கியிருக்கிறார்.
ஏற்கான்வே ‘லீடர்’ என்ற அரசியல் படத்தில் நடித்திருக்கும் ராணாவுக்கு இது இரண்டாவது அரசியல் படமாகும். பொதுவாக அரசியல் திரைப்படங்கள் என்றாலே, சில விசயங்களை மறைமுகமாகவும், நகைச்சுவை பாணியிலும் தான் சொல்லுவது வழக்கம். ஆனால், ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், நிகழ்வுகளையும் துணிச்சலாக சொல்லியிருக்கிறார்கள்.
நேர்மையான இளைஞன் ஒருவனை, அரசியல் எப்படி மாற்றுகிறது என்பது தான் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் கதை. இப்படத்தின் மூலம் அரசியல் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக பதிவு செய்துள்ள தேஜா, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் இப்படத்தை இயக்கியிருக்கிறாராம்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...