‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ராணா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘நான் ஆணையிட்டால்’. காஜல் அகர்வால், கேத்ரின் தெரஸா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ள இப்படத்தை தேஜா இயக்கியிருக்கிறார்.
ஏற்கான்வே ‘லீடர்’ என்ற அரசியல் படத்தில் நடித்திருக்கும் ராணாவுக்கு இது இரண்டாவது அரசியல் படமாகும். பொதுவாக அரசியல் திரைப்படங்கள் என்றாலே, சில விசயங்களை மறைமுகமாகவும், நகைச்சுவை பாணியிலும் தான் சொல்லுவது வழக்கம். ஆனால், ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், நிகழ்வுகளையும் துணிச்சலாக சொல்லியிருக்கிறார்கள்.
நேர்மையான இளைஞன் ஒருவனை, அரசியல் எப்படி மாற்றுகிறது என்பது தான் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் கதை. இப்படத்தின் மூலம் அரசியல் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக பதிவு செய்துள்ள தேஜா, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் இப்படத்தை இயக்கியிருக்கிறாராம்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...