கலிங்கா என்கின்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் ‘பற’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் பச்சை என்கின்ற காத்து, மெர்லின் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்க, இவர்களுடன் பல முன்னனி நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
சமீபத்தில் தொடங்கிய இப்படத்துன் முதல் நாள் படப்பிடிப்பில் டைரக்டர் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டு ஆக்ஷன், கட் சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
சிபின் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கிறார். உமா தேவி, சினேகன் ஆகியோர் பாடல்கள் எழுத, சாபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். மகேஷ் கலையை நிர்மாணிக்க, சிவசங்கர் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். எஸ்.பி.முகில் இணை தயாரிப்பை மேற்கொள்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...