கலிங்கா என்கின்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் ‘பற’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் பச்சை என்கின்ற காத்து, மெர்லின் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்க, இவர்களுடன் பல முன்னனி நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
சமீபத்தில் தொடங்கிய இப்படத்துன் முதல் நாள் படப்பிடிப்பில் டைரக்டர் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டு ஆக்ஷன், கட் சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
சிபின் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கிறார். உமா தேவி, சினேகன் ஆகியோர் பாடல்கள் எழுத, சாபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். மகேஷ் கலையை நிர்மாணிக்க, சிவசங்கர் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். எஸ்.பி.முகில் இணை தயாரிப்பை மேற்கொள்கிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...