மெரீனாவில் இருந்த சிவாஜி சிலை அகற்றப்பட்டு, புதிதாக கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு அவரது சிலை மெரினாவில் இருந்து அகற்றப்பட்டு தற்போது அடையாரில் கட்டப்படும் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மணிமண்டபம் திறக்கப்பட்டு, இந்த சிலையையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, சிவாஜி சிலை அகற்றியது குறித்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, மெரீனா கடற்கரை ஓரம் சிவாஜிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். சிவாஜி கணேசனின் மகன்களான பிரபு மற்றும் ராம்குமாரும் இதையே வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சிவாஜி சிலை அகற்றியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம் அரசுக்கு அப்பால் என் அப்பா” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்...
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் ( White Carpet Films) திகழ்கிறது...
முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் ’ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது...