வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றியை பகிர்ந்துக் கொள்ளும் விதத்தில் படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இயக்குநர் வினோத், கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, “நாங்கள் திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள் என்று சொன்னால் நீங்களும் கேட்பது இல்லை, ஆனால், ஒரு நல்ல படத்தை அதில் பார்க்கும் போது குற்ற உணர்ச்சி வரவேண்டும்.
அப்படி வந்தால் எங்களுக்கு நீங்கள் ஏதும் தரவேண்டும், ரூ 100 அருகில் கஷ்டப்படுபவர்களுக்கு தந்துவிடுங்கள்” என்று தெரிவித்தார்.
கார்த்தியின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பும் பெற்றுள்ளது.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...