வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றியை பகிர்ந்துக் கொள்ளும் விதத்தில் படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இயக்குநர் வினோத், கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, “நாங்கள் திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள் என்று சொன்னால் நீங்களும் கேட்பது இல்லை, ஆனால், ஒரு நல்ல படத்தை அதில் பார்க்கும் போது குற்ற உணர்ச்சி வரவேண்டும்.
அப்படி வந்தால் எங்களுக்கு நீங்கள் ஏதும் தரவேண்டும், ரூ 100 அருகில் கஷ்டப்படுபவர்களுக்கு தந்துவிடுங்கள்” என்று தெரிவித்தார்.
கார்த்தியின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பும் பெற்றுள்ளது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...