வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றியை பகிர்ந்துக் கொள்ளும் விதத்தில் படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இயக்குநர் வினோத், கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, “நாங்கள் திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள் என்று சொன்னால் நீங்களும் கேட்பது இல்லை, ஆனால், ஒரு நல்ல படத்தை அதில் பார்க்கும் போது குற்ற உணர்ச்சி வரவேண்டும்.
அப்படி வந்தால் எங்களுக்கு நீங்கள் ஏதும் தரவேண்டும், ரூ 100 அருகில் கஷ்டப்படுபவர்களுக்கு தந்துவிடுங்கள்” என்று தெரிவித்தார்.
கார்த்தியின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பும் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’...
Director Parameshwar Hivrale is bringing to the screen the life story of Gummadi Narsaiah- the CPI former MLA from Illandu, known as a champion of the poor and famously known for riding a bicycle to the Assembly...
அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’...