Latest News :

நானும் அன்புசெழியனுடன் தொடர்பு வைத்திருப்பவன் தான் - விஷால்!
Monday November-27 2017

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் அன்புசெழியனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் தயாரிப்பாளர் சங்கம் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம், அன்புசெழியனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் பலர் ஆதரவாக பேசி வருவதால், சினிமா இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கின்றன.

 

இந்த நிலையில், விஷால் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைபள்ளியில் நடைபெறுகிறது.

 

அங்கு உள்ளூர் கேபிள் டி.வி உரிமையாளர்களைச் சந்தித்த விஷால் தயாரிப்பாளர், அனுமதி பெறாமல் திரைப்படப் பாடல்கள், திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது. அதற்கு தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தினால் சட்டப்படி வெளியிட முடியும். இவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஷால். அசோக்குமாரின் தற்கொலை விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, தயாரிப்பாளர் "அசோக்குமார் மரணத்திற்கு நியாயம் தேவை. சினிமாத்துறையில் அன்புச் செழியனுக்கு ஆதரவாக வரும் குரல்கள் அவர்களின் சொந்த கருத்து. ஏன் நான்கூட அன்புசெழியனுடன் வியாபார ரீதியான தொடர்பு உடையவன்தான். ஆனால் மரணம் நடைபெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் எழுதிய கடிதத்தில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மரணத்திற்கு நியாயம் தேவை. அதற்காகக் காவல்துறையை நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

Related News

1366

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!
Wednesday July-09 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...

’பல்டி’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர்!
Wednesday July-09 2025

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி  அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...

Recent Gallery