தனுஷ் குடும்பத்திற்காக மின்சாரம் திருட்டு - அபராதம் விதித்த மின்துறை
Friday August-04 2017

நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அவ்விடத்திற்கு வந்த கேரவானில் உள்ள ஏசி-க்காக மின்சாரம் திருடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு தனது மனைவி ஐஸ்வர்யா, அம்மா, அப்பா உள்ளிட்ட குடும்பத்தாருடன் நடிகர் தனுஷ் நேற்று முன் தினம் வந்திருந்தார். அப்போது போடியில் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிய தனுஷ், நேற்று (விழாயக்கிழமை) ஆண்டிபட்டி, முத்துரெங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வமான கஸ்தூரி அங்கம்மாள் கோவிலுக்கு சென்றார். தனது குடும்பத்தாருடன் தனுஷ் காரில் கோவிலுக்கு வருவதற்கு முன்பாகவே, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அங்கே கேரவன் ஒன்று வந்திருந்தது.

 

அந்த கேரவனில் இருக்கும் ஏசி-க்காக அருகே இருந்த மின் கம்பத்தில் இருந்து முறைகேடான முறையில் மின்சாரம் திருடப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் கண்டித்தும் கேரவன் நிர்வாகிகள் கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து மக்கள் மின்சார வாரியத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த மின் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு, மின்சாரம் திருடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

 

உடனடியாக கேரவனை கைப்பற்றி அங்கிருந்து மின்வாரிய ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். பிறகு முறைகேடாக கேரவன் வாகனத்திற்கு மின்சாரம் எடுத்ததாகக் கூறி, ரூ.15,731 அபராதம் வசூலித்த பிறகு கேரவன் ஒப்படைக்கப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Related News

137

பாடகி Dhee-யின் ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு!
Wednesday April-22 2026

இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்...

’29’ பட தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஒயிட் கார்பெட் பிலிம்ஸ்!
Wednesday April-22 2026

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் ( White Carpet Films) திகழ்கிறது...

பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு!
Wednesday April-22 2026

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் ’ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது...

Recent Gallery