Latest News :

தனுஷ் குடும்பத்திற்காக மின்சாரம் திருட்டு - அபராதம் விதித்த மின்துறை
Friday August-04 2017

நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அவ்விடத்திற்கு வந்த கேரவானில் உள்ள ஏசி-க்காக மின்சாரம் திருடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு தனது மனைவி ஐஸ்வர்யா, அம்மா, அப்பா உள்ளிட்ட குடும்பத்தாருடன் நடிகர் தனுஷ் நேற்று முன் தினம் வந்திருந்தார். அப்போது போடியில் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிய தனுஷ், நேற்று (விழாயக்கிழமை) ஆண்டிபட்டி, முத்துரெங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வமான கஸ்தூரி அங்கம்மாள் கோவிலுக்கு சென்றார். தனது குடும்பத்தாருடன் தனுஷ் காரில் கோவிலுக்கு வருவதற்கு முன்பாகவே, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அங்கே கேரவன் ஒன்று வந்திருந்தது.

 

அந்த கேரவனில் இருக்கும் ஏசி-க்காக அருகே இருந்த மின் கம்பத்தில் இருந்து முறைகேடான முறையில் மின்சாரம் திருடப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் கண்டித்தும் கேரவன் நிர்வாகிகள் கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து மக்கள் மின்சார வாரியத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த மின் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு, மின்சாரம் திருடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

 

உடனடியாக கேரவனை கைப்பற்றி அங்கிருந்து மின்வாரிய ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். பிறகு முறைகேடாக கேரவன் வாகனத்திற்கு மின்சாரம் எடுத்ததாகக் கூறி, ரூ.15,731 அபராதம் வசூலித்த பிறகு கேரவன் ஒப்படைக்கப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Related News

137

”என் படங்களுக்கு திரையரங்குகளை கொடுங்கள்” - நடிகர் மகேந்திரன் கோரிக்கை
Thursday December-25 2025

எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம்  ‘த்ரிகண்டா’...

பிரபலங்களின் சுவாரஸ்ய தகவல்களோடு உருவாகியுள்ள ஆர்.எம்.வீரப்பன் பற்றிய ஆவணப்படம்!
Wednesday December-24 2025

தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

Recent Gallery