நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அவ்விடத்திற்கு வந்த கேரவானில் உள்ள ஏசி-க்காக மின்சாரம் திருடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு தனது மனைவி ஐஸ்வர்யா, அம்மா, அப்பா உள்ளிட்ட குடும்பத்தாருடன் நடிகர் தனுஷ் நேற்று முன் தினம் வந்திருந்தார். அப்போது போடியில் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிய தனுஷ், நேற்று (விழாயக்கிழமை) ஆண்டிபட்டி, முத்துரெங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வமான கஸ்தூரி அங்கம்மாள் கோவிலுக்கு சென்றார். தனது குடும்பத்தாருடன் தனுஷ் காரில் கோவிலுக்கு வருவதற்கு முன்பாகவே, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அங்கே கேரவன் ஒன்று வந்திருந்தது.
அந்த கேரவனில் இருக்கும் ஏசி-க்காக அருகே இருந்த மின் கம்பத்தில் இருந்து முறைகேடான முறையில் மின்சாரம் திருடப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் கண்டித்தும் கேரவன் நிர்வாகிகள் கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து மக்கள் மின்சார வாரியத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த மின் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு, மின்சாரம் திருடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக கேரவனை கைப்பற்றி அங்கிருந்து மின்வாரிய ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். பிறகு முறைகேடாக கேரவன் வாகனத்திற்கு மின்சாரம் எடுத்ததாகக் கூறி, ரூ.15,731 அபராதம் வசூலித்த பிறகு கேரவன் ஒப்படைக்கப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...