தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா பைனான்சியர் அன்பு செழியன், முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சினிமா பிரமுகர்களுடன் நான் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறேன். சசிகுமார் நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு நான் நிதி உதவி செய்தேன். அந்த படம் நஷ்ட்டம் அடைந்து விட்டது. பிறகு அப்படத்திற்காக கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப கேட்டேன். ஆனார், சசிகுமார் தரப்பினர் ‘கொடிவீரன்’ படத்தின் மூலம் அந்த கடனை அடைப்பதாக சொன்னார்கள். கொடுத்த கடனைபடம் ரிலீஸின் போது வட்டியுடன் கேட்பது சினிமாவில் வழக்கமான ஒன்றுதான். அதை தான் நான் செய்தேன்.
ஆனான், அசோக்குமார் தற்கொலையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி என்னை குற்றவாளியாக்கியுள்ளார்கள். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்ற உத்ரவாதத்தையும் தருகிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...