‘துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து விஷால் ‘இரும்புத்திரை’, ‘சண்டக்கோழி 2’ என இரன்உ படங்களில் நடித்து வருகிறார்.
இதில், அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘இரும்புத்திரை’ முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தை 2018 பொங்கல் பண்டிகையன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் கேரள ரிலீஸ் உரிமை அதிக தொகைக்கு விலை போயுள்ளதாகவும், அதனை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றி இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சமந்தா ஹீரோயினாக நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
விஷல் தனது விஷல் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரிக்கும் ‘இரும்புத்திரை’ தமிழ் மற்றும் தெலிங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...