மக்களிடம் நல்ல பெயர் எடுக்க பிக் பாஸ் ஜூலி போட்ட புது பிளான்!
Wednesday November-29 2017

ஊதிய உயர்வை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர்ந்து 3 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு சென்னை உயர் நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலயில், பிக் பாஸ் ஜூலி செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துக் கொள்ள இன்று வந்தார். அப்போது போலீசார் அவரை தடுத்தனர். அதற்கு, “நானும் செவிலியர் தான், போராட்டத்தில் கலந்துக் கொள்ள அனுமதியுங்கள்” என்று கூறி போலீசாருடன் ஜூலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஏற்கனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று, அதன் மூலம் கிடைத்த மக்கள் ஆதரவை வைத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, பிக் பாஸ் மூலம் மக்களிடம் தக்கு கிடைத்த வரவேற்பால், தற்போது படு ஜோராக லட்சம் லட்சமாக பணம் சம்பாதித்து வருகிறார்.

 

இருந்தாலும், அவரை மக்கள் வில்லியாகவும், ஏமாத்துக்காரராகவும் தான் பார்க்கிறார்கள். மக்களிடம் தனக்கு ஏற்பட்ட இந்த அவப்பெயரை மாற்றவே, ஜூலி செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

Related News

1384

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery