Latest News :

சிம்புவால் வீட்டை இழந்து நடுத்தெருவில் நிற்கும் தயாரிப்பாளர் - கண்ணீர் பேட்டி!
Friday December-01 2017

சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் தோல்வியை சந்தித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன், வீடு உள்ளிட்ட சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்.

 

இது குறித்து நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மைக்கேல் ராயப்பன், சிம்பு தனக்கு கொடுத்த இன்னல்கள் குறித்து கண்ணிரோடு அளித்த பேட்டி இதோ:

 

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. பின்னர், முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் தேதிகள் வழங்கவில்லை. படத்தின் கதைப்படி படத்தையும் எடுக்க விடவில்லை. பாதி படம் நடித்தபோது இரண்டு பாகமாக படத்தை தயாரியுங்கள். எது வந்தாலும் நான் பொறுப்பு என்றதுடன், 2ம் பாகத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்றார். 

 

சிம்புவுக்கு கேட்ட சம்பளம் தரப்பட்டது. ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடு தரச் சொல்லி கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு தர சிம்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும். சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்.

 

இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தில் அளித்த புகாரில் கூறி உள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை. சிம்புவிடம் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும். 

 

இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.

Related News

1391

‘சேத்துமான்’ இயக்குநர் தமிழின் புதிய படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கியது!
Sunday December-03 2023

பிரபலமான நாவல்கள் திரைப்படங்களாக உருப்பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது...

மீண்டும் ஒரு சாம்ராஜ்ய போட்டி! - ’சலார்’ பட டிரைலர் சொல்வது இது தானா?
Saturday December-02 2023

‘கே.ஜி.எப்’ புகழ் ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் மற்றொரு பிரமாண்ட திரைப்படம் ‘சலார்’...