Latest News :

தாணுவை சாக சொல்லுங்க, அவர் குடும்பத்துக்கு நான் உதவுறேன் - அமீர் அதிரடி!
Friday December-01 2017

மதுரையைச் சேர்ந்த அசோக் குமார், நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாரின் உறவினா். சசிகுமாரின் புரொடக்‌ஷன் நிறுவனத்தைக் கவனித்துவந்த இவர், கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்புச்செழியன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டியதால் வேறுவழியின்றி தற்கொலை செய்யும் முடிவிற்கு தள்ளப்பட்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.

 

இதையடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், அமீர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புச்செழியன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளார்.

 

இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தாணு அசோக் குமாரின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும், அனைவரும் கூறுவது போல் அன்புச்செழியன் கெட்டவர் இல்லை என்றும் அவரைப் போன்றவர்களை நம்பித் தான் சினிமா துறை இயங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். தான் சசிகுமாரை வைத்து படம் எடுத்து அதில் வரும் பணத்தை அசோக் குமாரின் குடும்பத்திற்கு கொடுக்க போவதாக கூறினார்.

 

இதற்கு கண்டனம் தெரிவித்த அமீர் வேண்டுமென்றால் தாணுவை சாகச் சொல்லுங்கள், நான் படம் எடுத்து அதில் வரும் பணத்தை அவர் குடும்பத்திற்கு தருகிறேன் என்றார்.

 

அமீரின் இந்த பதிலடியால் தாணு தரப்பு மிரண்டு போயுள்ளார்கள்.

Related News

1393

‘பெத்தி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday February-06 2026

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட  பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது...

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் ’நீலகண்டா’!
Friday February-06 2026

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன்...

கணவனின் கனவை நிறைவேற்ற தயாரிப்பாளரான மனைவி!
Friday February-06 2026

வீர அன்பரசு எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’...

Recent Gallery