தமிழ்த் திரைப்படங்களைத் திருட்டுத் தனமாக இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திற்கு வரும் விளம்பரங்களைத் தயாரிப்பாளர் சங்கம் முடக்கியுள்ளது. இதனால் அந்த இணையதளம் அதன் ரசிகர்களிடம் நன்கொடை கேட்டு வருகிறது.
தமிழ் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பைரசி எனப்படும், படங்களின் திருட்டு பிரிண்ட். முன்பெல்லாம் திருட்டு வீசிடிகளில் வந்தப் படங்கள், இப்போது உடனுக்குடன் இணையத்தளங்களில் யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்யும் வகையில் மாறியுள்ளது.
அதிலும் குறிப்பாக, தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் படம் வெளியான நாளே அதனை இணையதளத்தில் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது.
இதனையடுத்து, ஒரு இணையதளத்தின் வருவாய்க்கான முக்கிய வழியாக இருக்கும் விளம்பரங்களை தயாரிப்பாளர் சங்கம் முடக்கியுள்ளது. இதன் மூலம் விளம்பரங்களின் மூலம் பெற்று வந்த வருமானத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இழந்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து இயங்க வருமானம் இல்லாததால் தமிழ் ராக்கர்ஸ் தற்போது அதன் பாலோவர்ஸிடம் தங்களுக்கு நன்கொடை அளிக்குமாறு கேட்டுள்ளது. அதற்கு பலர் புதுப்படங்களை ஓசியில் பார்க்கத்தான் தமிழ்ராக்கர்ஸிக்கு வருவதாகவும், இங்கேயும் காசு கேட்டால் அதற்கு நாங்கள் தியேட்டரிலேயே பார்த்துவிடுவோம் என்று கூறியுள்ளனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...