தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, அழகான ஆண் குழந்தையை பெற்று இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பவர், தற்போது டிவி நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் என்று மீன்உம் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், நடன இயக்குநர் கலா மாஸ்டரால் சினேகா வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
சினேகாவின் அண்ணனை கலா மாஸ்டர் திருமணம் செய்துக்கொண்டதும், பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் அனைவரும் அறிந்தது தான். அறியாதது, இந்த விவாகாரத்தால், கலா மாஸ்டருக்கும், சினேகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதையடுத்து, சினேகாவுக்கு நடனம் ஆட தெரியாது, நடிக்க தெரியாது, என்று பலரிடம் கூறி வந்த கலா மாஸ்டர், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்துவிட்டாராம்.
இதனால், சினேகா இரண்டு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி ரொம்பவும் கஷ்ட்டப்பட்டாராம். பிறகு, கமலுடன் சேர்ந்து நடித்ததால், தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...