தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, அழகான ஆண் குழந்தையை பெற்று இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பவர், தற்போது டிவி நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் என்று மீன்உம் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், நடன இயக்குநர் கலா மாஸ்டரால் சினேகா வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
சினேகாவின் அண்ணனை கலா மாஸ்டர் திருமணம் செய்துக்கொண்டதும், பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் அனைவரும் அறிந்தது தான். அறியாதது, இந்த விவாகாரத்தால், கலா மாஸ்டருக்கும், சினேகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதையடுத்து, சினேகாவுக்கு நடனம் ஆட தெரியாது, நடிக்க தெரியாது, என்று பலரிடம் கூறி வந்த கலா மாஸ்டர், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்துவிட்டாராம்.
இதனால், சினேகா இரண்டு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி ரொம்பவும் கஷ்ட்டப்பட்டாராம். பிறகு, கமலுடன் சேர்ந்து நடித்ததால், தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது...
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன்...
வீர அன்பரசு எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’...