22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்தப் படத்தில் வினய், தமன் ஹீரோக்களாகவும், ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் நேத்ரா படமும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஆக்ஷன், திரில்லர் கலந்த கதையில் கூடுதலாக காதலும் சேர்ந்து இயக்கியிருக்கிறார். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு பிடித்தமான திரைக்கதையில், தெரிந்த சம்பவங்களில் மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ். வித்தியாசமான நகைச்சுவைக்கு இந்த முறை இமான் அண்ணாச்சியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கை கோர்த்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பரா.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இசை வெளியீட்டு விழா வெளிநாடுகளில் நடந்திருக்கிறது. முதன் முறையாக ’நேத்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிச.2) கனடாவில் நடைபெறுகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...