தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ஹீரோவாக அரை டசன் படங்களில் நடித்து வந்தாலும், பல படங்களில் கெளரவ வேடங்களிலும் நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து அவர் பல படங்களில் சிறப்பு தோற்றங்களில் தோன்றுவது எடுபடாமால் போனதால் இனு கெளரவ வேடங்களில் நடிக்க போவதில்லை என்ற முடுவுக்கு வந்துவிட்டார்.
நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசிய விஜய் சேதுபதி, நட்புக்காகதான் கெளரவ வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால், இனி யார் கேட்டாலும், எதற்காகவும் சிறப்பு தோற்றங்களில் நடிக்க மாட்டேன், என்று கூறினார்.
இந்த நிலையில், தனது முடிவை நயந்தாராவுக்காக விஜய் சேதுபதி மாற்றிக் கொண்டுள்ளார். நயந்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அவருக்கு ஜோடியாக கெளர வேடம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளார்.
ஏற்கனவே, ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயந்தாராவுடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி இரண்டாம் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...