தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ஹீரோவாக அரை டசன் படங்களில் நடித்து வந்தாலும், பல படங்களில் கெளரவ வேடங்களிலும் நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து அவர் பல படங்களில் சிறப்பு தோற்றங்களில் தோன்றுவது எடுபடாமால் போனதால் இனு கெளரவ வேடங்களில் நடிக்க போவதில்லை என்ற முடுவுக்கு வந்துவிட்டார்.
நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசிய விஜய் சேதுபதி, நட்புக்காகதான் கெளரவ வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால், இனி யார் கேட்டாலும், எதற்காகவும் சிறப்பு தோற்றங்களில் நடிக்க மாட்டேன், என்று கூறினார்.
இந்த நிலையில், தனது முடிவை நயந்தாராவுக்காக விஜய் சேதுபதி மாற்றிக் கொண்டுள்ளார். நயந்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அவருக்கு ஜோடியாக கெளர வேடம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளார்.
ஏற்கனவே, ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயந்தாராவுடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி இரண்டாம் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’...
ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி...