மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் போதை பொருள் விவகாரத்தில் தொடர்புள்ள தெலுங்கு நடிகர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்புடைய இந்த சம்பவத்தை தொடர்ந்து, மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரின் அடித்த குறி கோலிவுட் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தி சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவுக்குள் இருக்கும் போதை பார்ட்டிகளை வளைத்துள்ள போலீசார், அடுத்ததாக தமிழ் சினிமாவில் உள்ள போதை பார்ட்டிகளை வளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மது போதைக்கு அடிமையான பல நடிகர்கள் தற்போது அதையும் தாண்டி வேறு விதமான போதைகளில் நாட்டம் கொண்டிருப்பதாகவும், அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் தயார் செய்துள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் விரைவில் கோடம்பாக்கத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...