விஜயிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது!
Monday December-04 2017

நடிகர் விஜயிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த நாகராஜ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பேரண் என்று கூறிக்கொண்டு வலம் வந்த நாகராஜ், என்பவர் தான் ஒரு சினிமா பைனான்சியர் என்று கூறி திரையுலகினருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

 

இதற்கிடையே விஜயின் ‘தலைவா’ படத்திற்கு பிரச்சினை வந்த போது, ஆளுநர் ரோசய்யாவின் மூலம் படத்தை ரிலிஸ் செய்து தருவதாக கூறிய நாகராஜ், விஜயிடம் இருந்து ரூ.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஆனால், விஜய் இது குறித்து வெளியே சொல்லவில்லையாம்.

 

இந்த நிலையில், வேறு ஒரு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜியிடம் நடத்திய விசாரணையில், அவர்  விஜயிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Related News

1417

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery