‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாகவும், தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், விஜய் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அகிரா, ஸ்பைடர் என்று தொடர்ந்து இரண்டு தோல்விப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். விஜய்க்காக அவர் உருவாக்கியிள்ள கதை அவ்வளவு பிரமாதமாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் படத்தை தோக்கி நிறுத்தி விடலாம், என்ற நம்பிக்கையில் இருந்த முருகதாஸ் திடீரென்று விஜய் படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தானாம். ‘2.0’ படத்தை முடித்துவிட்ட அக்ஷய் குமார், ’மில்லியன் டாலர் பேபி’ என்ற ஹாலிவுட் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம். இப்படத்தை இயக்கும்படி அவர் முருகதாஸிடம் க்,ஏட்டுக் கொண்டதோடு, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டாராம்.
லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை இயக்குவதற்காக முருகதாஸ் விஜய் படத்தை கைவிட முடிவு செய்துவிட்டாராம். இதனால், விஜய் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...