இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் உண்மையை சொல்லும் திரைப்படமாக ‘நீலம்’ உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழுவினர் சான்றிதழ் தர மறுத்ததை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான வெங்கடேஷ் குமார், டெல்லியில் உள்ள மத்திய அரசு ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்தார்.
இந்த நிலையில், ‘நீலம்’ படத்தை வரும் டிசம்பர் 9 ஆம் தேதி மத்திய ஆணைய அதிகாரிகள் பார்க்க உள்ளனர்.
மனித நேயத்தின் அறைகூவலாக உருவாகியுள்ள நீலம் படத்திற்கு மத்திய தணிக்கை குழுவின் முடிவு சாதகமாகவே அமையும் என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விவி எண்டர்டெயின்மெண்ட் (VV Entertainments) நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice - stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது...
ஜீ5 ஓடிடி நிறுவனத்தின் புதிய இணையத் தொடரான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ (Once Upon A Time in Kayamkulam) படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது...
’மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம்...