Latest News :

என்னைப் பார்த்து பயப்படுவது ஏன்? - விஷால் கேள்வி
Wednesday December-06 2017

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்ட்யிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த பல்வேறு பரபரப்பான சம்பவங்களுக்கு பிறகு தேர்தல் அதிகாரி, விஷால் மனு நிராகரிகப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்ரு மாலை வெளியிட்டார்.

 

தனது வேட்பு மனு நிராகரிகப்பட்டது குறித்து நடிகர் விஷால் அளித்த பேட்டியில், “தேர்தல் அதிகாரி என்னுடைய மனு ஏற்கப்பட்டதாக சொன்னதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் அறிவித்ததை கேட்டு அனைவரும் கைதட்டி வரவேற்றனர். மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்று நினைக்கவில்லை. படத்தில் நடக்கும் காட்சிகளைப் போல் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் ஏற்பட்டன. 

 

மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இது தான் கதியா? ஜனநாயக நாட்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியிடக் கூடாதா? கடந்தமுறை பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்தானது, இந்தமுறை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு கீழ்த்தரமாக போயுள்ளது. டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்டாக இன்று நடந்துள்ளது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எதற்காக என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது என புரியவில்லை. 

 

என்னைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியவில்லை. வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்படும். 

 

முன்மொழிந்தவர்கள் இரண்டு பேரின் வீட்டின் முன்பு ஆளும்கட்சியின் ஆட்கள் இருந்து கொண்டு மிரட்டுகின்றனர். முன்மொழிந்தவரை மிரட்டியது மதுசூதனன் ஆட்களா என்பது அவரிடம் கேட்டால் தான் தெரியும்.  சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் ஒருவரை ஆதரித்து அவரை வெற்றியடையச் செய்வேன். அவர் மூலம் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன்.” என்று தெரிவித்தார்.

Related News

1441

இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் 'விவி என்டர்டைன்மென்ட்ஸ்'
Saturday January-03 2026

விவி எண்டர்டெயின்மெண்ட் (VV Entertainments) நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice - stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது...

ஜீ5-ன் புதிய இணையத் தொடர் ’ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’படப்பிடிப்பு துவங்கியது!
Saturday January-03 2026

ஜீ5 ஓடிடி நிறுவனத்தின் புதிய இணையத் தொடரான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ (Once Upon A Time in Kayamkulam) படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது...

ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் ‘மாயபிம்பம்’!
Saturday January-03 2026

’மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம்...

Recent Gallery