இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த ராஜபக்சேவை, ஒட்டு மொத்த தமிழர்களும் எமனாக பார்க்கும் நிலையில், சிலர் ராஜபக்சே குடும்ப நபர்களுடன் உறவாடி வருகிறார்கள். அந்த வகயில் இளையராஜாவின் குடிம்பத்தைச் சேர்ந்த பலர் ராஜபக்சே குடும்பத்தோடு உறவாட தொடங்கியுள்ளார்கள்.
இளையராஜாவின் தம்பியும் இயக்குநருமான கங்கை அமரனின்மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே அளித்த விருந்தில் பங்கேற்றுளார்கள்.
‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, அப்படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு நாமல் ராஜபக்சேவை சந்தித்த அவர், நாமல் அளித்த விருந்திலும் கலந்துக் கொண்டுள்ளார்.
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை, தமிழர்கள் பரம எதிரியாக பார்த்துக் கொண்டிருக்க வெங்கட் பிரபு போன்றவர்கள் பண ஆசையால், தமிழர் என்பதையும் மறந்து இனப்படுகொலைவாதி ராஜபக்சே குடும்பத்தார் அளித்த விருந்தில் பங்கேற்றதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
விவி எண்டர்டெயின்மெண்ட் (VV Entertainments) நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice - stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது...
ஜீ5 ஓடிடி நிறுவனத்தின் புதிய இணையத் தொடரான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ (Once Upon A Time in Kayamkulam) படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது...
’மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம்...