அனுஷ்கா, நாகர்ஜூனா, ஜெகபதிபாபு, சாய் குமார், பிரம்மானந்தம், சம்பத் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்’. ராமா என்ற வெங்கடேசபெருமாளின் பக்தர் பற்றிய உண்மை வாழ்க்கை சம்பவமான இப்படத்தினை கே.ராகவேந்திர ராவ் இயக்கியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் தான் எஸ்.எஸ்.ராஜமவுலியின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் வியந்து போய் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
படம் குறித்து கூறிய சிவகுமார், “அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம். சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப் பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.” என்று பாராட்டியுள்ளார்.
ஜீ5 ஓடிடி நிறுவனத்தின் புதிய இணையத் தொடரான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ (Once Upon A Time in Kayamkulam) படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது...
’மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம்...
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது...