பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் ‘நாச்சியார்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், டீசரின் முடிவில் ஜோதிகா அசிங்கமாக பேசியது தான்.
இதனால், பலர் ஜோதிகாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் கண்டனம் தெரிவித்ததோடு, சிலர் இரண்டு பேர் மீது வழக்கும் தொடர்ந்தார்கள். அதன்படி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பாண்டியன் என்பவர், கரூர் மாவட்ட நீதிமன்ற மாவட்டத்தில் ஜோதிகா மற்றும் இயக்குநர் பாலா மீது வழக்கு தொடர்ந்தார். மனுவில், ஜோதிகா பேசிய வசனத்தால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் மீதும், இயக்குநர் பாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதி, ஜோதிகா பேசிய வசனத்தால் யார் யார், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், என்ற பட்டியலை நீதுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தலித் பாண்டியனுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை 11 ஆம் தேதி தள்ளி வைத்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...