சமீபகாலமாக பாலியல் கொடுமைக்கு ஆளானது பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி சினிமாக்களிலும் நடிகைகளுக்கு இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் ராதிகா, கஸ்தூரி போன்றவர்கள் தாங்கள் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கூறினார்கள். அதேபோல் இந்தியில் வித்யா பாலன், கங்கனா ரனவத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகளும் தங்களது பாலியல் பாதிப்புகளை வெளிப்படையாக கூறினார்கள். ஆனால், இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை மட்டும் கூறவில்லை.
இந்த நிலையில், ’கேங்ஸ் ஆப் வஸ்சேபர்’ படத்தில் நடித்த ரிச்சா சட்டா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதே சமயம், தனது குடும்பத்தினருக்கு எதுவும் ஆகாது, என்று பாதுகாப்பு உறுதி அளித்தால் தான், பட்டியலை வெளியிடுவேன், என்று கூறியவர், நான் பட்டியலை வெளியிட்ட பிறகும் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும், என்று உறுதியளிக்க வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...