விரைவில் வெளியாக உள்ள ‘பலூன்’ படத்தை தொடர்ந்து ஜெய் நடித்து வரும் படத்திற்கு ‘ஜருகண்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பில் உள்ள இப்படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா திடீரென்று விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும், படப்பிடிப்பு பாதிக்காதபடி, உடனடியாக மற்றொரு பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்.டி.ராஜசேகரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதை தெரிவித்த படக்குழுவினர், அரவிந்த் கிருஷ்ணா விலகியதற்கான காரணத்தை சொல்லவில்லை.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...