விரைவில் வெளியாக உள்ள ‘பலூன்’ படத்தை தொடர்ந்து ஜெய் நடித்து வரும் படத்திற்கு ‘ஜருகண்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பில் உள்ள இப்படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா திடீரென்று விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும், படப்பிடிப்பு பாதிக்காதபடி, உடனடியாக மற்றொரு பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்.டி.ராஜசேகரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதை தெரிவித்த படக்குழுவினர், அரவிந்த் கிருஷ்ணா விலகியதற்கான காரணத்தை சொல்லவில்லை.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...