தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய் செய்வதை காப்பியடிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். படங்களில் மட்டும் அல்லாமல், படம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் விஜய் செய்வது போலவே அவர் செய்வதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, ‘வேலைக்காரன்’ படம் முடிந்ததும், படத்தில் பணி புரிந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் பேர்வல் பார்ட்டி கொடுத்தார். இதையும், அவர் விஜயை பார்த்து காப்பியடித்து விட்டார், என்று சிலர் கூறினார்கள்.
இதற்கு விளக்கம் அளித்த சிவகார்த்திகேயன், ”சரியான விஷயத்தை தான் விஜய் சார் செய்வார். அவர் செய்துவிட்டார் என்பதற்காக நான் செய்யாமல் இருப்பது தான் தவறு. அவரை பின்பற்றி தான் நான் இதையெல்லாம் செய்கிறேன் என தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...