‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி வரும் அட்லீ, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பதோடு, ரசிகர்கள் மற்றும் மாஸ் ஹீரோக்களுக்கு பிடித்த இயக்குநராகவும் உள்ளார். இருந்தாலும், அவர் பழைய படங்களை காப்பியடிப்பதாக அவர் மீது சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இத்தகைய குற்றச்சாட்டுக்கு அட்லீ, விளக்கம் அளித்தாலும் திரையுலகைச் சேர்ந்த சிலர் அவர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜெய் - அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் அட்லீயை தாக்கி பேசியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ‘பலூன்’ பிரஸ் மீட்டில் பேசிய அப்பட இயக்குநர் சினிஷ், ”பலூன் படத்தில் பல ஹாலிவுட் படங்களின் பாதிப்பு இருக்கும், இதை நான் ஓபனாக சொல்ல விரும்புகின்றேன். ஏனெனில் ’மௌன ராகம்’ போல் ஒரு படத்தை எடுத்துவிட்டு நான் மௌன ராகமே பார்க்கவில்லை என்று கூறமுடியாது.” என்று அட்லீயை மறைமுகமாக தாக்கி பேசினார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...