‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு ஜெய் - அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘பலூன்’. திகில் படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்க, ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோருடன் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஜெய் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள, எப்போதும் போல ஜெய் மிஸ்ஸிங்.
ஜெய் கலந்துக் கொள்ளாதது குறித்து இயக்குநரிடம் கேட்டதற்கு, “ஜெய் படத்தின் ஹீரோவே இல்லை. கதை தான் ஹீரோ” என்று கூறியதோடு, “ஜெய் புரோமோஷன் விரும்பாதவர். தனக்கு புரோமோஷன் வேண்டாம், படம் நன்றாக ஓடினால் போதும் என்று கூறிவிட்டார்” என்றார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...