‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு ஜெய் - அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘பலூன்’. திகில் படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்க, ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோருடன் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஜெய் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள, எப்போதும் போல ஜெய் மிஸ்ஸிங்.
ஜெய் கலந்துக் கொள்ளாதது குறித்து இயக்குநரிடம் கேட்டதற்கு, “ஜெய் படத்தின் ஹீரோவே இல்லை. கதை தான் ஹீரோ” என்று கூறியதோடு, “ஜெய் புரோமோஷன் விரும்பாதவர். தனக்கு புரோமோஷன் வேண்டாம், படம் நன்றாக ஓடினால் போதும் என்று கூறிவிட்டார்” என்றார்.
தமிழ் சினிமாவில் பீட்சா என்ற தலைப்பில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதே பீட்சாவை மையமாக வைத்து வெளியான ‘காக்கா முட்டை’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படங்களை தொடர்ந்து அதே பீட்சா அடையாளம் மட்டும் இன்றி, அதனுடன் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் புதிய ஐடியாலஜியுடன் உருவாகும் படம் தான் ‘பீட்சா பாய்ஸ்’...
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...