‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு ஜெய் - அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘பலூன்’. திகில் படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்க, ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோருடன் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஜெய் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள, எப்போதும் போல ஜெய் மிஸ்ஸிங்.
ஜெய் கலந்துக் கொள்ளாதது குறித்து இயக்குநரிடம் கேட்டதற்கு, “ஜெய் படத்தின் ஹீரோவே இல்லை. கதை தான் ஹீரோ” என்று கூறியதோடு, “ஜெய் புரோமோஷன் விரும்பாதவர். தனக்கு புரோமோஷன் வேண்டாம், படம் நன்றாக ஓடினால் போதும் என்று கூறிவிட்டார்” என்றார்.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...