‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு ஜெய் - அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘பலூன்’. திகில் படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்க, ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோருடன் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஜெய் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள, எப்போதும் போல ஜெய் மிஸ்ஸிங்.
ஜெய் கலந்துக் கொள்ளாதது குறித்து இயக்குநரிடம் கேட்டதற்கு, “ஜெய் படத்தின் ஹீரோவே இல்லை. கதை தான் ஹீரோ” என்று கூறியதோடு, “ஜெய் புரோமோஷன் விரும்பாதவர். தனக்கு புரோமோஷன் வேண்டாம், படம் நன்றாக ஓடினால் போதும் என்று கூறிவிட்டார்” என்றார்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...