பெண்களை கவர்ந்த ஹீரோவாக திகழ்ந்த அரவிந்த்சாமி ‘என் சுவாசக் காற்றே’ படத்திற்குப் பிறகு காணாமல் போனார். அதன் பிறகு உடல் எடை அதிகரித்து, தலையில் முடி கொட்டி, ஆளே மாறிப்போனவர் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.
இதற்கிடையே ‘கடல்’ படத்தின் மூலம் அரவிந்த்சாமியை மீண்டும் மணிரத்னம் அழைத்து வந்தார். பிறகு ‘தனி ஒருவன்’ படத்தில் மீண்டும் பழைய அழகு அரவிந்த்சாமியாக களம் இறங்கியவர், வில்லனாக மிரட்டியதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.
தற்போது ஹீரோவாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ மற்றும் மணிரத்னம் படம் என்று மீண்டும் பிஸியாகியிருக்கும் அரவிந்த்சாமி, விரைவில் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். அடுத்த ஆண்டு அவர் இயக்குநர் ஆவது நடக்கும், என்று அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது...
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன்...
வீர அன்பரசு எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’...