பெண்களை கவர்ந்த ஹீரோவாக திகழ்ந்த அரவிந்த்சாமி ‘என் சுவாசக் காற்றே’ படத்திற்குப் பிறகு காணாமல் போனார். அதன் பிறகு உடல் எடை அதிகரித்து, தலையில் முடி கொட்டி, ஆளே மாறிப்போனவர் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.
இதற்கிடையே ‘கடல்’ படத்தின் மூலம் அரவிந்த்சாமியை மீண்டும் மணிரத்னம் அழைத்து வந்தார். பிறகு ‘தனி ஒருவன்’ படத்தில் மீண்டும் பழைய அழகு அரவிந்த்சாமியாக களம் இறங்கியவர், வில்லனாக மிரட்டியதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.
தற்போது ஹீரோவாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ மற்றும் மணிரத்னம் படம் என்று மீண்டும் பிஸியாகியிருக்கும் அரவிந்த்சாமி, விரைவில் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். அடுத்த ஆண்டு அவர் இயக்குநர் ஆவது நடக்கும், என்று அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகள் வென்றதோடு, இயக்குநர்கள் சங்கர், மணிரத்னம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல பிரபலங்களால் பாராட்டப்பட்ட படம் ‘கூழாங்கல்’...
எஸ்.ஆர்.புரொடக்ஷன்ஸ் சார்பில் பி...
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)...