பெண்களை கவர்ந்த ஹீரோவாக திகழ்ந்த அரவிந்த்சாமி ‘என் சுவாசக் காற்றே’ படத்திற்குப் பிறகு காணாமல் போனார். அதன் பிறகு உடல் எடை அதிகரித்து, தலையில் முடி கொட்டி, ஆளே மாறிப்போனவர் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.
இதற்கிடையே ‘கடல்’ படத்தின் மூலம் அரவிந்த்சாமியை மீண்டும் மணிரத்னம் அழைத்து வந்தார். பிறகு ‘தனி ஒருவன்’ படத்தில் மீண்டும் பழைய அழகு அரவிந்த்சாமியாக களம் இறங்கியவர், வில்லனாக மிரட்டியதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.
தற்போது ஹீரோவாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ மற்றும் மணிரத்னம் படம் என்று மீண்டும் பிஸியாகியிருக்கும் அரவிந்த்சாமி, விரைவில் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். அடுத்த ஆண்டு அவர் இயக்குநர் ஆவது நடக்கும், என்று அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...