பெண்களை கவர்ந்த ஹீரோவாக திகழ்ந்த அரவிந்த்சாமி ‘என் சுவாசக் காற்றே’ படத்திற்குப் பிறகு காணாமல் போனார். அதன் பிறகு உடல் எடை அதிகரித்து, தலையில் முடி கொட்டி, ஆளே மாறிப்போனவர் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.
இதற்கிடையே ‘கடல்’ படத்தின் மூலம் அரவிந்த்சாமியை மீண்டும் மணிரத்னம் அழைத்து வந்தார். பிறகு ‘தனி ஒருவன்’ படத்தில் மீண்டும் பழைய அழகு அரவிந்த்சாமியாக களம் இறங்கியவர், வில்லனாக மிரட்டியதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.
தற்போது ஹீரோவாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ மற்றும் மணிரத்னம் படம் என்று மீண்டும் பிஸியாகியிருக்கும் அரவிந்த்சாமி, விரைவில் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். அடுத்த ஆண்டு அவர் இயக்குநர் ஆவது நடக்கும், என்று அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...