அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அருவி’ பலராலும் பாராட்டப்பட்டு வருவதோடு, விமர்சனம் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் அதிதி பாலன் என்ற அறிமுக நாயகி நடித்துள்ளார். இவரது நடிப்பு குறித்து ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருவதோடு, இவருக்கு பல விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் அதிதி பாலனை நடிக்க வைப்பதற்கு முன்பாக முன்னணி ஹீரோயினை நடிக்க வைக்கவே இயக்குநர் அருண் பிரபு விரும்பினாராம். அதற்காக அவர் மூன்று முன்னணி ஹீரோயின்களிடம் கதையும் சொல்லியிருக்கிறார். அவர்கள் நயந்தாரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சமந்தா ஆகியோர் ஆவர்.
கதையை கேட்ட இந்த மூன்று ஹீரோயின்களிலும் படத்தில் நடிக்க விரும்புவதாக கூறினாலும், படத்தின் இறுதிக் காட்சியான கடைசி 15 நிமிடக் காட்சிகளுக்காக உடல் எடை குறைப்பதில் சற்று தயக்கம் காட்டினார்களாம். மேலும், உடை எடையை குறைக்க காலதாமதம் ஆவதோடு, அதற்காக பிற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதாலயே நடிக்கவும் மறுத்துவிட்டார்களாம்.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என்...
மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...