அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அருவி’ பலராலும் பாராட்டப்பட்டு வருவதோடு, விமர்சனம் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் அதிதி பாலன் என்ற அறிமுக நாயகி நடித்துள்ளார். இவரது நடிப்பு குறித்து ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருவதோடு, இவருக்கு பல விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் அதிதி பாலனை நடிக்க வைப்பதற்கு முன்பாக முன்னணி ஹீரோயினை நடிக்க வைக்கவே இயக்குநர் அருண் பிரபு விரும்பினாராம். அதற்காக அவர் மூன்று முன்னணி ஹீரோயின்களிடம் கதையும் சொல்லியிருக்கிறார். அவர்கள் நயந்தாரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சமந்தா ஆகியோர் ஆவர்.
கதையை கேட்ட இந்த மூன்று ஹீரோயின்களிலும் படத்தில் நடிக்க விரும்புவதாக கூறினாலும், படத்தின் இறுதிக் காட்சியான கடைசி 15 நிமிடக் காட்சிகளுக்காக உடல் எடை குறைப்பதில் சற்று தயக்கம் காட்டினார்களாம். மேலும், உடை எடையை குறைக்க காலதாமதம் ஆவதோடு, அதற்காக பிற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதாலயே நடிக்கவும் மறுத்துவிட்டார்களாம்.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...