அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அருவி’ பலராலும் பாராட்டப்பட்டு வருவதோடு, விமர்சனம் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் அதிதி பாலன் என்ற அறிமுக நாயகி நடித்துள்ளார். இவரது நடிப்பு குறித்து ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருவதோடு, இவருக்கு பல விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் அதிதி பாலனை நடிக்க வைப்பதற்கு முன்பாக முன்னணி ஹீரோயினை நடிக்க வைக்கவே இயக்குநர் அருண் பிரபு விரும்பினாராம். அதற்காக அவர் மூன்று முன்னணி ஹீரோயின்களிடம் கதையும் சொல்லியிருக்கிறார். அவர்கள் நயந்தாரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சமந்தா ஆகியோர் ஆவர்.
கதையை கேட்ட இந்த மூன்று ஹீரோயின்களிலும் படத்தில் நடிக்க விரும்புவதாக கூறினாலும், படத்தின் இறுதிக் காட்சியான கடைசி 15 நிமிடக் காட்சிகளுக்காக உடல் எடை குறைப்பதில் சற்று தயக்கம் காட்டினார்களாம். மேலும், உடை எடையை குறைக்க காலதாமதம் ஆவதோடு, அதற்காக பிற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதாலயே நடிக்கவும் மறுத்துவிட்டார்களாம்.
இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்...
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் ( White Carpet Films) திகழ்கிறது...
முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் ’ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது...