Latest News :

’அருவி’ படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள் யார் தெரியுமா?
Monday December-18 2017

அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அருவி’ பலராலும் பாராட்டப்பட்டு வருவதோடு, விமர்சனம் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 

 

நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் அதிதி பாலன் என்ற அறிமுக நாயகி நடித்துள்ளார். இவரது நடிப்பு குறித்து ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருவதோடு, இவருக்கு பல விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில், இந்த படத்தில் அதிதி பாலனை நடிக்க வைப்பதற்கு முன்பாக முன்னணி ஹீரோயினை நடிக்க வைக்கவே இயக்குநர் அருண் பிரபு விரும்பினாராம். அதற்காக அவர் மூன்று முன்னணி ஹீரோயின்களிடம் கதையும் சொல்லியிருக்கிறார். அவர்கள் நயந்தாரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சமந்தா ஆகியோர் ஆவர்.

 

கதையை கேட்ட இந்த மூன்று ஹீரோயின்களிலும் படத்தில் நடிக்க விரும்புவதாக கூறினாலும், படத்தின் இறுதிக் காட்சியான கடைசி 15 நிமிடக் காட்சிகளுக்காக உடல் எடை குறைப்பதில் சற்று தயக்கம் காட்டினார்களாம். மேலும், உடை எடையை குறைக்க காலதாமதம் ஆவதோடு, அதற்காக பிற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதாலயே நடிக்கவும் மறுத்துவிட்டார்களாம்.

Related News

1558

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery