பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடி-க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதோடு, பல முன்னணி பிரபலங்களும் இவருக்கு நண்பர்கள் ஆவார். இதனால், பார்ட்டி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஜாலியாக வாழ்ந்து வந்த டிடி தற்போது பெரும் சோகத்தில் இருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நண்பர் ஸ்ரீநாத்தை திருமணம் செய்துக் கொண்ட டிடி, நேற்று விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.
டிடி-யின் திருமண வாழ்க்கை இப்படி சில ஆண்டுகளிலேயே தோல்வியில் முடிய காரணம், அவர் சினிமாவில் நடிப்பது, அவரது கணவர் வீட்டுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னணி பாடகி ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முகம் தெரியாத வாலிபர் ஒருவருடன் டிடி மிக மிக நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ஸ்ரீகாந்தும், அவரது குடும்பத்தாரம், அதில் இருந்தே டிடி மீது கோபமாகவே இருந்தார்களாம்.
மேலும், அவர் எங்கு சென்றாலும், எது செய்தாலும் அதில் தவறு கண்டுபிடித்தவர்கள் ஒரு கட்டத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றவே தடை விதித்துள்ளார்கள். அவர்கள் தடை விதித்ததற்கு பிறகே டிடி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தாராம். இப்படி தொடர்ந்து ஸ்ரீகாந்த் குடும்பத்தார் டிடி-க்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததால் தான் அவர் விவாகரத்து முடிவுக்கு வந்தாராம்.
ஆனால், இதற்கு மூலக் காரணமாக அமைந்ததே, அந்த பாடகி ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் தான் என்று கூறப்படுகிறது.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...