விக்ராந்துக்கு நேர்ந்த அவமானம்! - அணியில் இருந்து வெளியேறினார்
Friday December-22 2017

தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வரும் நடிகர்களில் விக்ராந்தும் ஒருவர். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட கிரிக்கெட் விளையாடி பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார்.

 

சினிமா நடிகர்கள் விளையாடும் சிசிஎல் என்ற கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் சினிமா நடிகர்களின் அணியில் நட்சத்திர வீரராக விக்ராந்த் திகழ்ந்து வந்தார். இவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து அணியை வெற்றி பெறச் செய்வார். இதனால், விக்ராந்தின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.

 

இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், தமிழ் சினிமா நடிகர்கள் அணியில் இருந்து விக்ராந்த் வெளியேறிவிட்டார். மேலும், இனி சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் தான் விளையாட போவதில்லை என்றும் விக்ராந்த் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்ராந்த், ”இந்த வருடம் நான் விளையாட மாட்டேன், ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம்” என்று கூறியுள்ளார்.

 

விக்ராந்த் அணியில் இருந்து வெளியேறும் அளவுக்கு அணியில் நடந்தது என்ன?, விக்ராந்தை அவமானப்படுத்தியது யார்? என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Related News

1598

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery