சிவகார்த்திகேயன், நயந்தாரா ஆகியோரது நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான ‘வேலைக்காரன்’ கடந்த 22 ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வேலைக்காரன், உலகம் முழுவதும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘தனி ஒருவன்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் என்பதாலும், சிவகார்த்திகேயன் - நயந்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்திருப்பதாலும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, நல்ல மெசஜும் சொல்லியிருக்கிறது.
இந்த நிலையில், படம் வெளியான 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளது.
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி வசூல் படைத்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ரூ.2.8 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதால், படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணித்துள்ள சினிமா வியாபாரிகள், மாஸ் ஹீரோக்களின் படங்களின் வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் தன்னையும் ஒரு மாஸ் ஹீரோவாக நிரூபித்துவிட்டார், என்று கூறியுள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...