1980 களில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்த மோகன் பாபு, வசூல் மன்னன் என்ற பெயரும் எடுத்தார். தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து வந்தவர், தெலுங்கில் ஹீரோவாக பல படங்களில் நடித்தவர், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த மோகன் பாபு, தற்போது ‘காயத்ரி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். மோகன் பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, நிகிலா விமல் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
சிறு இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு, தனது மகனுக்கே வில்லனாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோகன் பாபு வில்லனாக நடித்த அனைத்துப் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதால், இப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...