தென் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி பாண்டே, ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் ஜீவா ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் ஜீவாவின் 29 வது படமாகும். இதில் ஹீரோயினாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின் ஷாலினி பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டான் சாண்டி இயக்குகிறார்.
படம் குறித்து கூறிய இயக்குநர் டான் சாண்டி, “ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் ஜேனரில் இப்படம் உருவாகிறது. இதற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விசயம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.” என்றார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...